காசா சுகாதார நெருக்கடி: சிகிச்சைக்காக காத்திருக்கும் 20,000 நோயாளிகள்

16 பிப்ரவரி 2026, 4:14 AM
காசா சுகாதார நெருக்கடி: சிகிச்சைக்காக காத்திருக்கும் 20,000 நோயாளிகள்

காசா, பிப் 16- காசா பகுதியில் நிலவும் கடுமையான இஸ்ரேலியக் கட்டுப்பாடுகள் காரணமாக, சுமார் 20,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ரஃபா எல்லை வழியாக வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

புற்றுநோய் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட இவர்கள், உரிய மருத்துவ வசதிகள் இன்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் காத்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த மே 2024 முதல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்த ரஃபா எல்லை பிப்ரவரி 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டாலும், அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க போதுமானதாக இல்லை.
அங்கு நிலவும் சுகாதாரப் பேரழிவிற்கு ஏற்ப பயண அனுமதி வழங்கப்படாததால், ஆயிரக்கணக்கானோரின் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து தள்ளிப்போகின்றன.எல்லையைக் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் நோயாளிகள், இஸ்ரேலிய இராணுவத்தின் கடுமையான சோதனைகள் மற்றும் மனிதாபிமானமற்ற கட்டுப்பாடுகளால் பெரும் உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்பங்களை அனுபவிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது போன்ற சட்டவிரோதக் கட்டுப்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென 'அடாலா' மற்றும் 'கிஷா' போன்ற மனித உரிமை அமைப்புகள் சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்தியுள்ளன.போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும் தொடரும் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பது அங்குள்ள சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது.
அழிவுகள் ஒருபுறம் இருந்தாலும், சுமார் 80,000 பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசாவிற்கே திரும்பப் பதிவு செய்திருப்பது அவர்களின் மீண்டு வரும் உறுதியைக் காட்டுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.