மலாக்காவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று மாணவர்கள் பலி

28 பிப்ரவரி 2026, 9:09 AM
மலாக்காவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று மாணவர்கள் பலி

ஷா ஆலம், பிப்ரவரி 28: மலாக்கா, தம்பாக் பாயா சாலையில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மூன்று உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். அதிகாலை 3:50 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் முஹம்மர் ஆதிஃப் ஃபரிஹின் முகமது அனுவார், 15, மற்றும் முகமது ஆஸ்மி அப்துல் ரஹிமா, 16, மற்றும் ஒரு பில்லியன் சவாரி, நூர் கைரியா மாட் மஸ்லின், 16 ஆகியோரின்  உயிர்கள் பலியாகின.

மற்றொரு சவாரி, முகமது ஹசிக் ஹைக்கால் காசிம், 18, பலத்த காயங்களுக்கு உள்ளாகி, இப்போது  மலாக்கா மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மலாக்கா தெங்கா மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் கிறிஸ்டோபர் , அதிகாலை 4:02 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தனது குழுவுக்கு தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

"புக்கிட் கட்டில் திசையில் இருந்து தியாங் டுவாவை நோக்கி இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சென்றதாகவும், மற்றொன்று எதிர் திசையில் இருந்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப் பட்டது".

"அந்த இடத்திற்கு வந்ததும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் சாலையின் நடுவில் நேருக்கு நேர் மோதியதாக நம்பப் படுகிறது" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பிலியன் பயணி சம்பவ இடத்திலேயே இறந்திருப்பது உறுதி செய்யப் பட்டதாக அவர் கூறினார். பாதிக்கப் பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டன. விபத்துக்கான உண்மையான காரணத்தை தீர்மானிக்க இந்த வழக்கு மேலும் விசாரணையில் உள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.