ஈப்போ, பிப். 10: பத்து காஜா மற்றும் லெங்கோங்கில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலையில் நிகழ்ந்த இரண்டு தனித்தனி விபத்துகளில் மூதாட்டி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.
பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நூர் அஹ்மட் கூறுகையில், பத்து காஜா, ஜாலான் தஞ்சோங் துவாலாங்கில் நடந்த முதல் விபத்தில் 34 மற்றும் 65 வயதுடைய இரு பெண்கள் சிக்கினர்.
"இரவு 9.45 மணியளவில் பெரோடுவா மைவி மற்றும் டொயோட்டா ஹைலக்ஸ் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது," என்று அவர் கூறினார்.
"பெரோடுவா மைவியின் ஓட்டுநர் மற்றும் முன் பயணிகள் இருக்கையில் சிக்கிக்கொண்ட அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. மேல் நடவடிக்கைக்காக அவர்களது உடல்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இரண்டாவது விபத்து குறித்து சபரோட்ஸி கூறுகையில், இன்று அதிகாலை 3.56 மணியளவில் லெங்கோங் அருகே, ஜாலான் பாலிங்-கோல கங்சார் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பெரோடுவா பெஸா கார் சம்பந்தப்பட்ட தகவல் கிடைத்தது.
இந்த விபத்தில் மூன்று பெண்கள், ஒரு சிறுமி உட்பட ஐந்து பேர் பயணித்ததாக அவர் கூறினார்.
"வாகனத்தில் சிக்கிக்கொண்ட பெண் ஒருவரை சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்," என்று அவர் மேலும் கூறினார்.


