நகர்ப்புற ஏழ்மைக்கு அர்ப்பணிக்கப்பட்ட தனி அமைச்சகம் அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - அமிருடின்

29 ஜனவரி 2026, 1:47 AM
நகர்ப்புற ஏழ்மைக்கு அர்ப்பணிக்கப்பட்ட தனி அமைச்சகம் அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - அமிருடின்

ஷா ஆலம், ஜனவரி 28 — மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, மலேசியாவில் நகர்ப்புற ஏழ்மையை எதிர்கொள்ள அர்ப்பணிக்கப்பட்ட தனி அமைச்சகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார்.

கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகையில், சமூகங்களில் ஊட்டச்சத்து குறைபாடு, கற்றல் சிரமங்கள், நீண்டகால பின்னடைவுகள் உள்ளிட்ட பரந்த மற்றும் சிக்கலான தாக்கங்களை ஏற்படுத்தும் இந்தப் பிரச்சனையை முழுமையாக எதிர்கொள்ள இத்தகைய நடவடிக்கை முக்கியமானது என்றார்.

“முதல் படியாக, அர்ப்பணிக்கப்பட்ட தனி அமைச்சகம் ஒன்று இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் (கேபிகேடி) நகர்ப்புற ஏழ்மையை எதிர்கொள்ளும் மைய நிறுவனமாக இருந்தது.

“இன்று, வாழ்க்கைச் செலவு குறித்து கவனம் செலுத்தும் அமைச்சகமும் உள்ளது, இந்தப் போர்ட்ஃபோலியோவை மேலும் வலுப்படுத்த முடியும்.

“எனினும், எனது கருத்துப்படி, நகர்ப்புற ஏழ்மையை கையாள்வதற்கு குறிப்பிட்ட அமைச்சகம் அல்லது அர்ப்பணிக்கப்பட்ட போர்ட்ஃபோலியோவை அமைக்கத் தவறினால், நாம் அறிகுறிகளை மட்டுமே கையாள்வோம், வேர்களை அல்ல, நகர்ப்புற ஏழ்மைப் பிரச்சனை தீவிரமாக அல்லது திறம்படவே கையாளப் படாது,” என்று அவர் இன்று டேவான் ராக்யாட்டில் அரச உரை மீதான விவாதத்தில் தெரிவித்தார்.

பார்ட்டி கெஅடிலான் ராக்யாட்  நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளில் நாட்டின் விரைவான வளர்ச்சியை கருத்தில் கொண்டு நகர்ப்புற ஏழ்மை பிரச்சினைக்கு முக்கியமான கவனம் தேவை என்றார்.

சிலாங்கூரில், 70 முதல் 80 விழுக்காடு இடங்கள் வளர்ச்சியால் நகர மயமாக்கப்பட்டுள்ளன, ஆனால் சில குழுக்கள் பின்தங்கி நகர்ப்புற ஏழ்மையில் விழுந்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“நகர்ப்புற ஏழ்மையை ஒழிப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் குறிப்பிட்ட திட்டத்தை உருவாக்க கூட்டரசு அரசு மாநில மற்றும் உள்ளூராட்சி அரசுகளோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று அமிருடின் கூறினார்.

நாட்டின் பொருளாதார சாதனைகளை குறைத்து மதிப்பிடும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவர் விமர்சித்தார், இந்த எண்ணிக்கைகள் “வானத்திலிருந்து பறிக்கப்பட்டவை” அல்ல, தரவுகளால் ஆதரிக்கப் படுபவை என்றார்.

“இல்லத்தில் விவாதிக்கும்போது எண்ணிக்கைகள் மற்றும் தரவுகளை நம்பியே ஆக வேண்டும். இல்லையெனில், ஒரு ஏழை ‘மாக்சிக்’ ஐ சந்தித்துவிட்டு முழு நாடும் ஏழை என்று கூறுவது போன்ற உதாரணக் கதைகளைப் பயன்படுத்த நேரிடும்.

“பணவீக்கம், வளர்ச்சி மற்றும் நாணய மதிப்பு குறித்த தரவுகள் அதிகாரப்பூர்வமான மற்றும் உலகளாவிய மதிப்பீடு செய்யப் பட்டவை. நாம் எண்ணிக்கைகளை வெறுமனே கற்பனை செய்ய முடியாது. எனவே, ஏதாவது ஒன்றை சவால் விடுக்க விரும்பினால், அதை தரவுகளுடன் சவால் விடுக்க வேண்டும்,” என்று அமிருடின் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.