'தர்ம மடாணி' திட்டத்தின் கீழ் 155 கோவில்களுக்கு 3.1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

27 ஜனவரி 2026, 10:38 AM
'தர்ம மடாணி' திட்டத்தின் கீழ் 155 கோவில்களுக்கு 3.1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

புத்ராஜெயா, ஜன 27- மடாணி அரசாங்கத்தின் 'தர்ம மடாணி' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, 155 கோவில்களுக்கு மொத்தம் 3.1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயாவில், ஆலயத் தலைவர்களிடம் அதற்கான அங்கீகார கடிதங்களை மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் எடுத்து வழங்கினார். இதில் ஒவ்வோர் ஆலயமும் தலா 20,000 ரிங்கிட்டை பெற்றுக் கொண்டன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்தாண்டு அறிவித்த இத்திட்டம், நாடு முழுவதும் உள்ள 1,000 பதிவு பெற்ற இந்துக் கோவில்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 20 மில்லியன் ரிங்கிட் உதவியின் ஒரு பகுதியாகும்.

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் மேற்பார்வையில், தற்போது மனிதவள அமைச்சின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

“பதிவு தொடங்கப்பட்டதிலிருந்து, மொத்தம் 915 விண்ணப்பங்கள் மித்ராவால் பெறப்பட்டு, நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

“மீதமுள்ள விண்ணப்பங்கள் அடுத்த கட்டத்தில் பரிசீலிக்கப்படும். மேலும் மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவு (மித்ரா) சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு அவ்வப்போது அதிகாரப்பூர்வ முடிவைத் தெரிவிக்கும்,” என்று அவர் கூறினார்.

தலைவரும் கோயில் நிர்வாகப் பிரதிநிதிகளும் நல்லாட்சியின் கொள்கைகளின் அடிப்படையில் ஒதுக்கீட்டைப் பொறுப்புடன் உள்ளூர் இந்திய சமூகத்தின் நன்மைகளுக்கு முழுமையாக பயன்படுத்துவார்கள் என ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.