சிலாங்கூரில் அதிக மாணவர்கள் உள்ள 181 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்

23 ஜனவரி 2026, 10:45 AM
சிலாங்கூரில் அதிக மாணவர்கள் உள்ள 181 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்
சிலாங்கூரில் அதிக மாணவர்கள் உள்ள 181 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்
சிலாங்கூரில் அதிக மாணவர்கள் உள்ள 181 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்

ஷா ஆலம், ஜன 23: சிலாங்கூரில் மொத்தம் 181 பள்ளிகள் அதிக மாணவர்கள் எண்ணிக்கையால் நெரிசல் மிகுந்த பள்ளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் அங்கு கற்றல் இடப் பற்றாக்குறை பிரச்சனையைச் சமாளிக்க இந்த ஆண்டு முதல் புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.

இந்த கட்டுமானத் திட்டம், நெரிசல் மிகுந்த வகுப்பறைகள் பிரச்சனைக்கு குறுகிய கால மற்றும் நடுத்தர கால தீர்வாக தொழில்மயமாக்கப்பட்ட கட்டிட அமைப்பு (IBS) முறையைப் பயன்படுத்தும் என்று சிலாங்கூர் மாநில கல்வி இயக்குநர் டத்தின் வான் நோர் அஷிகின் அப்துல் காசிம் கூறினார்.

"அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் வசதியான இடத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக இத்திட்டத்தில் அமைச்சகம் மிகவும் உறுதியாக உள்ளது. இந்த திட்டம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

இன்று சிலாங்கூர் மாநில கல்வி அலுவலகத்தில் மீடியா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ஃபரீட் முகமட் அஷாரி தலைமையிலான மீடியா சிலாங்கூரிடமிருந்து பெறப்பட்ட மரியாதை நிமித்தமான சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

சிலாங்கூர் முழுவதும் உள்ள 181 பள்ளிகளில் புதிய கூடுதல் வகுப்பறை திட்டங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் மில்லியன் கணக்கான ரிங்கிட் செலவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வான் நோர் ஆஷிகின் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.