கிள்ளானில் விதிமுறைகளை மீறிய மோட்டார் சைக்கிள்களை JPJ பறிமுதல்

6 ஜனவரி 2026, 8:28 AM
கிள்ளானில் விதிமுறைகளை மீறிய மோட்டார் சைக்கிள்களை JPJ பறிமுதல்

ஷா ஆலம், ஜனவரி 6- கிள்ளான், புக்கிட் ராஜா சுங்கச்சாவடி வளாகத்தில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது, சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய மோட்டார் சைக்கிள்களை சிலாங்கூர் சாலை போக்குவரத்துத் துறை (JPJ) பறிமுதல் செய்தது.

சிலாங்கூர் சாலை போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையில், மோட்டார் சைக்கிள் டயர்கள் மற்றும் பதிவு எண்கள் சாலை போக்குவரத்துத் துறையின் விதிமுறைகளின்படி இல்லாதது கண்டறியப்பட்ட முக்கிய விதிமீறல்களில் அடங்கும் என்று தெரிவித்தது.

"திறன்மிகு ஓட்டுநர் உரிமம் (CDL) இல்லாதது, மோட்டார் வாகன உரிமம் (LKM) காலாவதியானது, காப்பீடு இல்லாதது, பின்னோக்குக் கண்ணாடி இல்லாதது மற்றும் எக்ஸாஸ்ட்டை மாற்றியமைத்தது போன்ற விதிமீறல்களுக்காகப் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது."

"சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்துத் துறை அனைத்து புகார்களுக்கும் தொடர்ந்து கவனம் செலுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது," என்று அது தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டது.

பயனாளர்களின் பாதுகாப்பையும், பொதுப் போக்குவரத்து அமைப்பின் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வதற்காக, கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் சாலை போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்குவதை சிலாங்கூர் சாலை போக்குவரத்துத் துறை தொடர்ந்து உறுதிப்படுத்தும் என்று வலியுறுத்தியது.

சாலை போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான தகவல்களை aduantrafik@jpj.gov.my என்ற மின்னஞ்சல் அல்லது e-aduan செயலி போன்ற அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.