கோலாலம்பூர், ஜன 5: புத்ராஜெயாவில் இன்று பிரதமர் துறை ஊழியர்களுடன் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றிய 2026 புத்தாண்டு செய்தியின் சாராம்சம் பின்வருமாறு.
அரசு வழக்கறிஞருக்கும் நாட்டின் சட்ட ஆலோசகர் இடையிலான அதிகாரங்களைப் பிரிப்பது இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் முதல் சட்டம் ஆகும்.
தகவல் சுதந்திர மசோதா இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
பிரதமரின் பதவிக்கால வரம்பு மசோதா, இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.
பொது சேவைகளின் தரத்தை மேம்படுத்த டிஜிட்டல் முறையை செயல்படுத்துவது தீவிரப்படுத்தப்படும்.
நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் 10 ஆண்டுகள் எந்த அதிகரிப்பும் இல்லாமல் தற்போது அதிகரிக்கப்படும்.
பள்ளி மேம்பாட்டு ஒதுக்கீடுகள் தேசிய சீனப்பள்ளிகளுக்கு RM80 மில்லியனும், தேசிய தமிழ்ப்பள்ளிகளுக்கு RM50 மில்லியனும் வழங்கப்படும்.
2026 STR கட்டம் 1 ஜனவரி 20 அன்று விநியோக்கிக்க தொடங்கும்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு RM100 சாரா உதவி தொகை பிப்ரவரி 9ஆம் தேதி வழங்கப்படும்.
மாதாந்திர சாரா கொடுப்பனவுகள் ஜனவரி 9 முதல் படிப்படியாக வழங்கப்படும்.
ரஹ்மா மடாணி விற்பனை ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும், மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் மாதத்திற்கு மூன்று முறை நடைபெறும்.
ஒவ்வொரு மாணவருக்கும் தொடக்க பள்ளி உதவி RM150 வழங்கப்படும்


