உலு சிலாங்கூர், 3 ஜன: நாட்டின் அமைப்பை மாற்றி மேம்படுத்தும் போராட்டம் அறிவுப்பூர்வமாக, கொள்கை அடிப்படையில் மற்றும் நேர்மை மதிப்புகளை அடிப் படையாகக் கொண்டு அமல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியாகத் தெரிவித்தார்.
அமைப்பு மாற்றத்துக்கான முயற்சிகள் தனிப்பட்ட நலன் அல்லது அமைச்சர் பதவி காரணமாக இல்லாமல், மிகவும் நியாயமான அமைப்பை உருவாக்குவதற்கும், அதிகாரம் பொறுப்புடனும் அறிவுப்பூர்வமாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு மானது என்று அவர் வலியுறுத்தினார்.
“இந்தப் போராட்டம் பதவி அல்லது அந்தஸ்து பற்றியது அல்ல, ஆனால் நியாயமான அமைப்பை உருவாக்கும் முயற்சி மற்றும் அதிகாரம் தவறாக பயன் படுத்தப் படாமல் இருப்பதை உறுதி செய்வது.மாற்றம் கண்மூடித்தனமாக செய்யப்படக் கூடாது. ஊழல் மற்றும் தவறுகளை நிராகரிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு அடியும் அறிவுப்பூர்வமாகவும் கொள்கையுடனும் எடுக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
இன்று புக்கிட் பெருந்தோங் கோல்ஃப் ரிசார்ட்டில் நடைபெற்ற 2026 தேசிய குடும்ப நாள் மற்றும் தேசிய சீர்திருத்தவாதிகள் சந்திப்பில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அதேநேரம், அன்வார் அனைத்து அடிப்படை அடுக்குகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
வெட்ரன்கள் உட்பட ஒவ்வொரு கிளையிலும் வெட்ரன் யூனிட் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். இது இளம் தலைவர்களுக்கும் அனுபவமிக்க தலைவர்களுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும். அந்த ஒத்துழைப்பு போராட்டத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், கடந்த கால அனுபவங்களைப் பயன்படுத்தி எதிர்கால திசையை மிகவும் வலுவானதும் நேர்மையானதாக உருவாக்குவதற்கு முக்கியம் என்று அவர் கூறினார்.
அதே நிகழ்ச்சியில், பிரதமர் கிலோவுக்கு RM2.70 விலையில் வழங்கப்படும் குலா ரஹ்மா தயாரிப்புக்கு ஹலால் லோகோ சான்றிதழை வழங்கி தொடங்கி வைத்தார். HMBE Legacy Sdn Bhd அறிக்கையின்படி, குலா ரஹ்மா முன்முயற்சி உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்துடன் (KPDN) இணைந்து மலேசியா மடானி, ராக்யாத் டிசாந்துனி கட்டமைப்பின் கீழ் அமல்படுத்தப்படுகிறது.அந்தத் தயாரிப்பு ஹலால் சான்றளிக்கப்பட்டது. முழு செயலாக்கம், பேக்கிங் மற்றும் விநியோகம் உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டை பின்பற்றுகிறது. மேலும் 100 சதவீத பூமிபுத்ரா சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (PKS) ஈடுபட்டுள்ளன.


