ஷா ஆலம், டிச 20 – மாநிலத்தில் சிறு குழுவாக இணைந்து தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான மூலதன கடனுதவியை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வழங்குகிறது.
சிலாங்கூரில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு குறிப்பாக 18 முதல் 65 வயது வரையிலானவர்களுக்கு சிறு தொழில் தொடங்க டாருல் ஏஹ்சான் வணிகக் கடனுதவித் திட்டம் (நாடி) 50,000 வெள்ளி வரை நிதியுதவி வழங்குகிறது.
நியாகா டாருல் எஹ்சான் (நாடி) திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்புவோர் https://mikrokredit.selangor.gov.my என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறவாரியம் தனது முகநூல் பதிவில் கூறியது.
கூடுதல் தகவலுக்கு அருகிலுள்ள ஹிஜ்ரா கிளையை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.


