பெண் தொழில்முனைவோருக்கு வெ.50,000 வரை பிரத்தியேகக் கடனுதவி – ஹிஜ்ரா

20 டிசம்பர் 2025, 7:12 AM
பெண் தொழில்முனைவோருக்கு வெ.50,000 வரை பிரத்தியேகக் கடனுதவி – ஹிஜ்ரா

ஷா ஆலம், டிச 20  மாநிலத்தில் சிறு குழுவாக இணைந்து தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கு 50,000 வெள்ளி வரையிலான மூலதன கடனுதவியை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வழங்குகிறது.

சிலாங்கூரில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு குறிப்பாக 18 முதல் 65 வயது வரையிலானவர்களுக்கு சிறு தொழில் தொடங்க டாருல் ஏஹ்சான் வணிகக் கடனுதவித் திட்டம் (நாடி) 50,000 வெள்ளி வரை நிதியுதவி வழங்குகிறது.

நியாகா டாருல் எஹ்சான் (நாடி) திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்புவோர் https://mikrokredit.selangor.gov.my என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறவாரியம் தனது முகநூல் பதிவில் கூறியது.

கூடுதல் தகவலுக்கு அருகிலுள்ள ஹிஜ்ரா கிளையை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.