2025 சீ விளையாட்டு போட்டி- தாய்லாந்தில் கோலாகலமாக தொடக்கம் கண்டது

10 டிசம்பர் 2025, 4:41 PM
2025 சீ விளையாட்டு போட்டி- தாய்லாந்தில் கோலாகலமாக தொடக்கம் கண்டது

பாங்காக், டிச 10- 800,000 லிட்டருக்கும் அதிகமான நீர் மற்றும் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பச்சை நிற தீச்சுடர், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2025 தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களாகும். இங்குள்ள ராஜமங்களா தேசிய அரங்கம் ஒற்றுமையின் அடையாளமாக மாறியது.

ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவுள்ள பிரதான மேடை, அரங்கத்தை ஒரு கடலாக மாற்றியது. இது 33வது இரு ஆண்டு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் பதினொரு நாடுகளையும் இணைத்தது.

‘Back to the Origin’ என்ற பகுதியுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் 800 ட்ரோன்கள் 2025 சீ விளையாட்டுப் போட்டியின் சின்னத்தை உருவாக்கின. பின்னர், ஆசியான் மற்றும் உலக பார்வையாளர்களுக்கு தாய்லாந்தின் வாழ்த்தான ‘சவாஸ்டி’யுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

ட்ரோன்களின் ஒளியைத் தொடர்ந்து, ‘Ignite the Games’ என்ற பகுதியுடன் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. லேசர், தீச்சுடர்கள் மற்றும் ஒளிக்கீற்றுகள் அரங்கத்தை நிரப்பி, தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்களின் லட்சியத்தையும் மன உறுதியையும் வெளிப்படுத்தின.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.