நைஜீரியாவில் பதற்றம்; பெனின் ராணுவ சதி முயற்சி நடவடிக்கை, நைஜீரியா படைகள் தலையீடு

8 டிசம்பர் 2025, 11:02 AM
நைஜீரியாவில் பதற்றம்; பெனின் ராணுவ சதி முயற்சி நடவடிக்கை, நைஜீரியா படைகள் தலையீடு

நைஜீரியா, டிச 8- ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நைஜீரியாவின் அண்டை நாடான பெனினில் ஒரு குழுவினர் அரசு தொலைக்காட்சியில் இராணுவ சதி முயற்சியை அறிவித்ததைத் தொடர்ந்து, நைஜீரிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தலையிட்டதாக நைஜீரிய ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பெனின் அரசாங்கத்தின் இரண்டு கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு "நைஜீரிய விமானப்படை போர் விமானங்கள் நாட்டுக்குள் நுழைந்து, சதிகாரர்களை தேசிய தொலைக்காட்சி மற்றும் அவர்கள்  கூடியிருந்த இராணுவ முகாமில் இருந்து வெளியேற்றி,  பெனின் வான்வெளியைக் கைப்பற்ற உத்தரவிட்டார்" என்று அவரது அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.

பெனின் அரசாங்கம் இந்த சதி முயற்சி முறியடிக்கப் பட்டுவிட்டதாக அறிவித்துள்ளது. பெனின் வெளியுறவு அமைச்சகம் "உடனடி நைஜீரிய வான்வழி ஆதரவு" கோரியதாகவும், "அவசர மற்றும் தீவிரமான சூழ்நிலை" குறித்தும், அத்துடன் அரசியலமைப்பு ஒழுங்கு, தேசிய நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சகத்தின் குறிப்பு தெரிவித்ததாக நைஜீரியா கூறியது.

: தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்; தாய்லாந்து இராணுவத் தாக்குதல், வான்வழித் தாக்குதல்கள்

பெங்கொக், டிச 8-

தாய்லாந்து-கம்போடியா இடையேயான சர்ச்சைக்குரிய எல்லையில் புதிய சண்டை வெடித்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து இராணுவம் இன்று (திங்கட்கிழமை) அண்டை நாடான கம்போடியா மீது வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாகத் தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தக் குழப்பத்தில் ஒரு தாய்லாந்து இராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார். இரு தரப்பினரும் சமீபத்திய மோதலுக்காக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். திங்கட்கிழமை அதிகாலையில் தாய்லாந்தின் ஊபோன் ரட்சதனி (Ubon Ratchathani) மாகாணத்தில் உள்ள தாய்லாந்துப் படைகள் மீது கம்போடிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாய்லாந்து இராணுவப் பேச்சாளர் வின்டாய் சுவரீ (Winthai Suvaree) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

"இதையடுத்து, ஆதரவு ஆயுத தாக்குதலுக்கு உள்ளானதில் ஒரு தாய்லாந்து வீரர் கொல்லப்பட்டார், நான்கு பேர் காயமடைந்தனர்" என்று இராணுவத்திற்கு அறிக்கை கிடைத்ததாக வின்டாய் கூறினார்.

மேலும், கம்போடியப் படைகளின் தாக்குதலைத் தணிப்பதற்காக "பல பகுதிகளில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்க விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம்" என்றும் தாய்லாந்து அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.