ஜோர்ஜ்டவுன், டிச 1: தொழிற்சாலை வேன் ஒன்று மலை தடத்தில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த ஒரு பெண் உயிரிழந்ததுடன் மேலும் ஏழு பேர் கடுமையாகக் காயமடைந்தனர். இந்த விபத்து அதிகாலை மவுண்ட் எர்ஸ்கைன் சாலையில் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் கடுமையாகக் காயமடைந்த ஆறு பெண்கள், 21 முதல் 52 வரையிலான வயத்திற்கு உட்பட்டவர்கள் ஆவர். வேனின் ஆண் ஓட்டுநரும் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக காலை 5.59 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததும், மீட்பு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றது என பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
மேலும், சிறப்பு சாதனங்கள் மூலம் சிக்கியிருந்தவர்களைக் மீட்பு குழுவினர் மீட்டனர். அனைவரும் காலை 7.17 மணிக்குள் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.
இதில் கடுமையான காயங்களால் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மற்ற ஏழு பேரும் தீவிர காயங்களுடன் அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


