வெள்ள நிவாரண மையங்களை அன்ஃபால் சாரி பார்வையிட்டார்

26 நவம்பர் 2025, 7:50 AM
வெள்ள நிவாரண மையங்களை அன்ஃபால் சாரி பார்வையிட்டார்

ஷா ஆலம், நவ 26: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடி உதவி பெறுவதை உறுதி செய்யவும், செயல்பாடுகள் சீராக நடப்பதை கண்காணிக்கவும் பல வெள்ள நிவாரண மையங்களை சமூக நலத்துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி பார்வையிட்டார்.

உலு லாங்கட்டில் உள்ள சுங்கை செராய் ஆரம்பப் பள்ளி மற்றும் ஈஜோக்கில் உள்ள டேசா அமான் ஆரம்பப் பள்ளி ஆகிய மையங்களை பார்வையிட்டதாக அன்ஃபால் தெரிவித்தார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் சௌஜானா அமான் பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

மாநில செயலாளரை சந்தித்து, குடியிருப்புகளில் நடைபெற்று வரும் வீடுகளின் சுத்தப்படுத்தும் பணிகளை அவர் கண்காணித்தார்.

“இந்த கடுமையான நேரத்தில் மக்களுடன் இருக்க வலிமையைப் பெற்றதற்கு நன்றி. எங்களின் சோர்வு, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சந்திக்கும் சவால்களை ஒப்பிடும்போது மிகவும் சிறியது,” என்று அவர் தெரிவித்தார்.

தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினரான அன்ஃபால், முன்னணி பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்ததோடு பாதிக்கப்படவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.