ad

ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

7 நவம்பர் 2025, 8:35 AM
ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

ஷா ஆலம், நவ 7 — செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்தும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் கிடையாது என சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை சட்டவிரோதமானதுடன், பிற சாலைப் பயணிகளின் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என ஜேபிஜே அமலாக்க மூத்த இயக்குநர் டத்தோ முகமட் கிஃப்லி மா ஹாசன் கூறினார்.

இதுவரை 9,114 அபராத நோட்டீஸ்களை ஓட்டுநர்கள் மற்றும் நிறுவனர் உரிமையாளர்களுக்கு ஜேபிஜே வழங்கியுள்ளது. இவை செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் தொழில்வகை உரிமம் (GDL) இல்லாத குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மீறலுக்காக வழங்கப்பட்டவை ஆகும்.

“மேலும், விசாரணை நோட்டீஸ் வழங்குதல், வாகன பரிசோதனை உத்தரவு மற்றும் சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 கீழ் பறிமுதல் உள்ளிட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று அவர் முகநூல் வழியாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சு உள்ளிட்ட பிற அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, செல்லுபடியாகும் உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கையை முழுமையாக ஒழிக்க தொடர்ச்சியான கண்காணிப்பை ஜேபிஜே மேற்கொள்ளும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.