ad

14வது மாடியிலிருந்து விழுந்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு – உடனடி வேலைநிறுத்த உத்தரவு

23 அக்டோபர் 2025, 3:45 AM
14வது மாடியிலிருந்து விழுந்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு – உடனடி வேலைநிறுத்த உத்தரவு

ஷா ஆலம், அக் 23: கடந்த வாரம் பெட்டாலிங் ஜெயாவில் கட்டிடப் பணியில் இருந்தபோது 14வது மாடியிலிருந்து விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

அக்டோபர் 18ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், இரு வெளிநாட்டு ஆடவர்கள் உயிரிழந்தனர் என சிலாங்கூர் மாநில தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை தெரிவித்தது.

சம்பவம் குறித்து தொடக்க விசாரணையில், இருவரும் 14வது மாடியின் வழிச்சாலையில் அலுமினியம் லூவர் பேனல் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொதுஅவர்கள் 14வது மாடியிலிருந்து 11வது மாடியில் விழுந்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மற்றொருவர் சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தில் உயரத்தில் நடைபெறும் அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்துமாறு முதலாளிக்கு தடையுத்தரவு கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்தின் காரணம் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதைக் கண்டறிய தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.