ad

இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்த சிலாங்கூர் அரசு – உலகத் தரத்திலான  அரைவட்டச் சிப் கல்வியை வலுப்படுத்தும்

22 அக்டோபர் 2025, 5:28 PM
இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்த சிலாங்கூர் அரசு – உலகத் தரத்திலான  அரைவட்டச் சிப் கல்வியை வலுப்படுத்தும்
இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்த சிலாங்கூர் அரசு – உலகத் தரத்திலான  அரைவட்டச் சிப் கல்வியை வலுப்படுத்தும்
இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்த சிலாங்கூர் அரசு – உலகத் தரத்திலான  அரைவட்டச் சிப் கல்வியை வலுப்படுத்தும்

ஷா ஆலம், அக்டோபர் 22 —இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்த சிலாங்கூர் அரசு – உலகத் தரத்திலான  அரைவட்டச் சிப் கல்வியை வலுப்படுத்தும் புதிய ஒத்துழைப்புக்கு ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.

சிலாங்கூர் அரசாங்கம் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மதராஸ் உடன் இணைந்து செயல்படுவது, உள்ளூர் மாணவர்கள் உலகத் தரத்திலான கற்றல் மற்றும் புதுமை வசதிகளைப் பெறுவதை உறுதி செய்யும் என மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் இயக்கத்துறை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்துள்ளார்.

இந்த ஒத்துழைப்பு, உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் அரைவட்டச் சிப் தொழில் சூழலில் சிலாங்கூரின் நிலையை வலுப் படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய மைல் கல்லாகும், குறிப்பாக இந்தியா உலகளாவிய சிப் வடிவமைப்பாளர்களில் சுமார் 20 சதவீதத்தினரை கொண்டுள்ளது. “இந்தியாவின் முதல் நிலை பொறியியல் பல்கலைக்கழகமான IIT மதராஸுடன் இணைந்து செயல்பட முடிந்தால், உலகளாவிய புதுமை வாய்ப்புகளை நமது மாணவர்கள் நேரடியாக அணுகும் வய்ப்புகளை பெறலாம்,” என்று அவர் கூறினார்.

இங், இன்று மாநிலச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற IIT மதராஸ் மற்றும் மலேசியாவின் மேம்பட்ட அரைவட்டச் சிப் அகாடமி (Asem) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த (MOU) கையெழுத்து விழாவில் பேசினார். அவர் கூறுகையில், இந்த ஒத்துழைப்பு, கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவுக்குச் சென்ற வணிகப் பயணத்தின் போது தொடங்கியது, அப்போது அவர் சிலாங்கூர் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் பொருளாதார கழகம் (Sidec) மற்றும் Asem சார்பாக IIT டெல்லி மற்றும் IIT மதராஸ் உட்பட பல இந்திய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்ந்தார்.

“நான் IIT மதராஸின் இயக்குநர் பேராசிரியர் கமகோட்டியுடன் சிறந்த கலந்துரையாடல் நடத்தினேன். அவர் கூறிய ஒன்று எனக்கு நினைவில் நின்றது — ‘மாணவர்கள் சரியான வேலைகளைப் பெறும் இடைவெளியை சுருக்க விரும்புகி - றோம்’. அதற்கு நான் முழுமையாக இணங்குகிறேன்,” என்று இங் கூறினார்.

இந்த MOU அடிப்படையில், Asem மற்றும் IIT மதராஸ் அடுத்த ஆண்டில் இரண்டு முக்கியப் பாடத்திட்டங்களை அறிமுகப் படுத்தும்: Graduate Skilling Programme — RISC-V மற்றும் கணினி வடிவமைப்பில் கவனம் செலுத்தும், Unisel உடன் கூட்டு கல்வி பாதை (Joint Academic Pathway) — இதில் Unisel இன் மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் பீடம் IIT மதராஸுடன் இணைந்து மறு சீரமைக்கப் படும்.

மாணவர்கள் Unisel இலிருந்து பட்டப்படிப்பு சான்றிதழையும், IIT மதராஸிலிருந்து கூடுதல் சான்றிதழையும் பெறுவார்கள். முதல் ஆண்டில் 350 பங்கேற்பாளர்கள் பயன்பெறுவார்கள். “இந்த கூட்டாண்மை IIT மதராஸுக்கு தென்கிழக்கு ஆசியாவில் தனது நிபுணத்துவத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பையும் வழங்குகிறது, அதில் சிலாங்கூர் அதன் முக்கிய கூட்டாளியாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

இங் மேலும், இந்த ஒத்துழைப்பு இரண்டு நாடுகள், இரண்டு கல்வி நிறுவனங்கள் மற்றும் இரண்டு புதுமை சமூகங்களு-க்கிடையிலான பாலமாக செயல்படுகிறது, மேலும் திறமைகள் மேம்பாடு சிலாங்கூரின் வளர்ச்சி உத்தியின் மையமாக உள்ளது. “தொழில்நுட்ப துறையில் சிறந்த முதலீடு எப்போதும் மக்கள்தான். நாம் சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கலாம், ஆனால் திறமையான மனங்கள் இல்லாமல் முன்னேற முடியாது. அதனால்தான் சிலாங்கூரின் உத்தி எப்போதும் ‘மக்கள் முதலில்’ என்பதாகும்.

இந்த கூட்டாண்மையின் மூலம், Asem மற்றும் IIT மதராஸ் நாளைய கண்டுபிடிப்புகளை வடிவமைக்கும் அடுத்த தலைமுறை பொறியாளர்களை உருவாக்கப் போகின்றன,” என்று அவர் கூறினார். கடந்த ஒரு ஆண்டில், Asem 600 மாணவர்களைப் பயிற்றுவித்து, 65 பல்கலைக்கழகங்களுடன் கூட்டாண்மையில் ஈடுபட்டுள்ளது.

மற்றும் ARM மற்றும் Synopsys போன்ற தொழில் முன்னேற்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. இந்த அகாடமி அடுத்த பத்து ஆண்டுகளில் 20,000 பொறியாளர்களை உருவாக்கும் இலக்கை வைத்துள்ளது. இன்றைய நிகழ்வில், மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி, மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி, Sidec தலைமை செயல் அதிகாரி யோங் காய் பிங், IITM குளோபல் தலைமை செயல் அதிகாரி திருமலை மதவநாராயண், மற்றும் Asem பொது மேலாளர் ஏஞ்சல் லோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.