கோலா லிப்பிஸ், அக் 13 - கடந்த சனிக்கிழமை, பகாங் மாநில அளவில் 2025ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. அதில் உடற்பயிற்சி பயிற்றுநர் 29 வயதான ஜெய் பிரபாகரன் குணசேகரன் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
தற்போது மலேசிய சாதனை புத்தகத்தில் மூன்றாவது முறையாக ஜெய் பிரபாகரன் தமது பெயரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இரு நாள்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் இடைவிடாமல் உடற்பயிற்சி செய்து, அவர் இச்சாதனையை புரிந்துள்ளார்.
அதாவது வெள்ளிக்கிழமை 3 மணி நேரத்திற்கு, இரு வெவ்வேறான உடற்பயிற்ச்சி செய்த ஜெய் பிரபாகரன், சனிக்கிழமை மேலும் 3 மணி நேரத்திற்கு மற்றொரு உடற்பயிற்சியை செய்து சாதனை படைத்தார்.
இச்சாதனைக்காக இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து தான் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதாக ஜெய் பிரபாகரன் தெரிவித்தார். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று முறை பயிற்சி செய்வதோடு உணவும் அதற்கு ஏற்றாற்போல கட்டுப்பாடாக எடுத்து கொள்வதாக அவர் கூறினார்.
மூன்று தேசிய சாதனைகளைப் படைத்த முதல் மலேசியராக ஜெய் பிரபாகரனை மலேசிய சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது.
பெர்னாமா