ad

2023 முதல் சுமார் 65,000 பாலஸ்தீனர்கள் பலி- 164,000 பேர் காயம்

14 செப்டெம்பர் 2025, 3:15 AM
2023 முதல் சுமார் 65,000 பாலஸ்தீனர்கள் பலி- 164,000 பேர் காயம்
2023 முதல் சுமார் 65,000 பாலஸ்தீனர்கள் பலி- 164,000 பேர் காயம்
2023 முதல் சுமார் 65,000 பாலஸ்தீனர்கள் பலி- 164,000 பேர் காயம்
2023 முதல் சுமார் 65,000 பாலஸ்தீனர்கள் பலி- 164,000 பேர் காயம்

அங்காரா, செப். 14- கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர்  முதல் காஸாவில்  இஸ்ரேல் நடத்தி வரும்  இனப்படுகொலைப் போரில் குறைந்தது 64,803 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

அந்தப் பகுதியில் மேலும் ஏழு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு நேற்று  தெரிவித்ததாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 47 உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வேளையில்
205 பேர் காயமடைந்துள்ளதாகவும் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 164,264 ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சு ஒரு அறிக்கையில் கூறியது.

மீட்புக் குழுக்கள் உதவி வழங்க முடியாததால் மேலும்  பல பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியிலும் தெருக்களிலும் சிக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது இஸ்ரேலிய இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு  26 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அமைச்சு அறிவித்தது.

சர்ச்சைக்குரிய காஸா மனிதாபிமான அறக்கட்டளை நடவடிக்கை கடந்த  மே மாதம்  27ஆம் தேதி தொடங்கப்பட்டது
முதல் உதவிக்காக காத்திருந்த போது கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின்  எண்ணிக்கை 2,484 ஆக உயர்ந்துள்ளது. இத்தாக்குதல்களில்  மேலும் 18,117 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அதே காலகட்டத்தில், இரு சிறார்கள்  உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினி காரணமாக உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து கடந்த 2023 அக்டோபர் முதல் பதிவான பட்டினி தொடர்பான இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. இதில் 145 சிறார்களும் அடங்குவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.