ஈப்போ, செப். 8- ஸ்ரீ இஸ்கந்தார், கம்போங் தெலுக் கெப்பாயாங்கில் உள்ள போத்தா கீரி ஆற்று மணல் சேகரிப்பு பகுதியில் நேற்று மண் தோண்டும் மற்றும் குழாய் பொருத்தும் பணிகளை மேற்கொண்டிருந்த ஆடவர் ஒருவர் மண்ணில் புதையுண்டார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இதர மூன்று பேரும் நேற்று மாலை 5.00 மணியளவில் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக பேராக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமது ஹனாபியா தெரிவித்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மணல் பம்பில் மூன்று பேர் சிக்கியிருப்பதையும் மற்றொருவர் முற்றிலுமாக புதையுண்டதையும் கண்டதாக அவர் கூறினார்.
சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள மண் திடீரென சரிந்து தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுவதை இரண்டு தொழிலாளர்கள் கண்டனர். சுமார்
மூன்று மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்ட பாதிக்கப்பட்டவர்களை மீட்க அவர்கள் முயற்சி மேற்கொண்டார்கள் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மார்பு வரை மண்ணில் புதையுண்டிருந்த 28 முதல் 38 வயதுக்குட்பட்ட மூன்று பேர் மாலை சுமார் 6.30 மணியளவில் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாகவும் முழுமையாக புதைக்கப்பட்ட 26 வயதுடைய பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் ஷாஸ்லீன் கூறினார்.
இறந்த நபரின் உடல் மாலை 7.59 மணிக்கு உடல் வெற்றிகரமாக மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீ இஸ்கந்தர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
மண் தேண்டும் பணியின்போது விபத்து - ஆடவர் புதையுண்டு மரணம்
8 செப்டெம்பர் 2025, 10:34 AM