ad

நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இரு இந்தோனேசியர்கள் கைது

5 செப்டெம்பர் 2025, 9:43 AM
நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இரு இந்தோனேசியர்கள் கைது

ஷா ஆலம், செப். 5 -  படகு மூலம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய  முயன்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு இந்தோனேசிய ஆடவர்களை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்.எம்.இ.ஏ.) நேற்று மோரிப்பில்
கைது செய்தது.

பதிவு செய்யப்படாத படகு ஒன்று  நள்ளிரவில் மோரிப்பிலிருந்து தென்மேற்கே 0.04 கடல் மைல் தொலைவில் பயணிப்பது  காணப்பட்டதாக சிலாங்கூர் மாநில கடல்சார்  அமலாக்க நிறுவன இயக்குநர் கடல்சார் கேப்டன் அப்துல் முஹைமின் முகமது சாலே கூறினார்.

இதன் தொடர்பில் எம்.எம்.இ.ஏ.  ரோந்து படகு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. அக்குழு படகை நிறுத்த உத்தரவிட்டது, ஆனால் உத்தரவைப்  புறக்கணித்து அப்படகு வேகமாகச் சென்றது. கிட்டத்தட்ட 30 நிமிட துரத்தலுக்குப் பிறகு அப்படகு  மோரிப் சதுப்புநிலப் பகுதியில் கரை ஒதுங்கியது என்று அவர் கூறினார்.

படகில் யாரும் இல்லாத நிலையில்  சுற்றியுள்ள பகுதியில் நடத்திய தேடுதலின் போது 22 மற்றும் 33 வயதுடைய இரண்டு இந்தோனேசிய ஆடவர்கள் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்கள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றார் அவர்.

அவ்விருவரும்   அங்கீகரிக்கப்படாத பாதை வழியாக நாட்டிற்குள் நுழைய முயன்றதாக நம்பப்படுகிறது.  இந்த வழக்கு 1959/63ஆம் ஆண்டு
குடிநுழைவுச் சட்டம்  மற்றும் 2007ஆம் ஆண்டு ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம் பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புசட்டம்  ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

படகும் இரண்டு சந்தேக நபர்களும் பூலாவ் இண்டா கடல் காவல் படை  படகுத் துறைக்கு  கொண்டு செல்லப்பட்டு மேல் நடவடிக்கைக்காக சிலாங்கூர் கடல்சார் புலனாய்வு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.