கிள்ளான், கோல லங்காட்டில் இன்று பிற்பகல் 1.00 மணி வரைகனமழை பெய்யும்

1 செப்டெம்பர் 2025, 3:43 AM
கிள்ளான், கோல லங்காட்டில் இன்று பிற்பகல் 1.00 மணி வரைகனமழை பெய்யும்

ஷா ஆலம், செப். 1- கிள்ளான்  மற்றும் கோல லங்காட்டில் இன்று பிற்பகல்  1.00  மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜோகூர், லாபுவான் மற்றும் சபாவின் பல பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக தீவிரத்தன்மை-
யுடன் கூடிய கன மழைக்கான அறிகுறிகள்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் என எதிர்பார்க்கப்படும் போது  இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்படும் என வானிலை ஆய்வுத் துறை  குறிப்பிட்டது.

இந்த எச்சரிக்கை ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும். இது  வெளியிடப்படும் போது அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை செல்லுபடியாகும்.

பொதுமக்கள்  www.met.gov.my என்ற  வானிலை  ஆய்வுத் துறையின் அதிகாரப்பூர்வ   வலைத்தளம் மற்றும்  சமூக ஊடகங்கள் வாயிலாகப் பெறலாம். ளேலும்  வானிலை தொடர்பான  சமீபத்திய மற்றும் மிகவும் துல்லியமான தகவல்களைப் பெற myCuaca செயலியைப்  பதிவிறக்க பொது மக்கள்  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.