ஷா ஆலம், ஆகஸ்ட் 25: பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த கித்தா சிலாங்கூர் புத்தக வவுச்சர்களின் விநியோகம், தற்போது ஆறாம் படிவ மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை அறிவித்த டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாணவர்கள் புத்தகங்களை வாங்க உதவும் வகையில் RM200 மதிப்புள்ள வவுச்சர்களின் விநியோகம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.
"சிலாங்கூரில் சலுகைகளைப் பெற்ற ஆறு படிவ மாணவர்களின் எண்ணிக்கையை நாங்கள் கணக்கிடுவோம், தரவு விரைவில் வழங்கப்படும். விண்ணப்ப வழிமுறை அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்படும்.
"முன்னர், இந்த திட்டம் பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டது. ஆனால், ஆறாம் படிவ மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் நுழையவிருப்பதால் நாங்கள் இதை விரிவுபடுத்துகிறோம், என்று அவர் கூறினார்.
முன்னர், கித்தா சிலாங்கூர் மாணவர் புத்தக மின்-வவுச்சரை அமிருடின் அறிமுகப்படுத்தினார். இது மொத்தம் RM200,000 ஒதுக்கீட்டில் 1,000 மாணவர்களுக்கு பயனளித்தது.