ஷா ஆலம், 17 ஆகஸ்ட்ஃ சிலாங்கூர் வேளாண் மேம்பாட்டுக் கழகம் (PKPS) மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) ஏற்பாடு செய்த ரஹ்மா எஷான் விற்பனை (JER) திட்டம் இன்று தொடர்ந்தது. இந்த விற்பனையில் முழு கோழி (RM10) திட இறைச்சி (RM10/பேக்) முட்டைகள் (RM8/டஜன்) கானாங்கெளுத்தி (RM6/பேக்) இரண்டு கிலோ சமையல் எண்ணெய் (RM10, மற்றும் ஐந்து கிலோ அரிசி (RM12) வழங்கப்படுகிறது மேலும் விற்பனைக்கு மாவு (RM2) சார்டின்கள் (RM 5.50) வெர்மிசெல்லி (RM 2.50) சோளம் பிஸ்கட்டுகள் (RM3) சலவை சோப்பு (RM 16.00) மற்றும் செலவழிப்பு டயப்பர்கள் (RM12) உள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஜே. இ. ஆர்-க்கான இடங்கள் இங்கேஃ

இவ்வாண்டு இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரசு 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை குறைப்பதில் மாநில அரசு காட்டி வரும் அக்கறையை இந்த திட்டம் புலப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் பத்து ஏஹ்சான் மார்ட் பல்பொருள் கடைகளைத் திறக்க பி.கே.பி.எஸ். திட்டமிட்டுள்ளது. தற்போது சுங்கை துவா மற்றும் பண்டான் இண்டா ஆகிய இடங்களில் இந்த கடைகள் திறக்கப்பட்டுள்ள வேளையில் உலு கிளாங்கில் இதன் கிளை விரைவில் திறக்கப்படவுள்ளது.
பி.கே.பி.எஸ். ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்த கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் சந்தைதைய விட 10 முதல் 15 விழுக்காடு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டத்தை தரம் உயர்த்தும் முயற்சியாக இந்த ஏஹ்சான் மார்ட் கடைகளை மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.


