ஷா ஆலம், ஜூலை 28: காபூல் நதியின் நீர் ஓட்டத்தால் ஏற்பட்டதாக நம்பப்படும் சுங்கை செமினியில் அசாதாரண வாடையை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (லுவாஸ்) இன்று அதிகாலை மஞ்சள் குறியீட்டை செயல்படுத்தியது.
பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பெர்ஹாட் (ஏர் சிலாங்கூர்) உடனான ஆரம்ப விசாரணைகளில், 10 டன் வரையிலான அசாதாரண வாசனையைப் பதிவாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்கை செமினியின் நிலையை, சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
“நேரடி மாசுபாட்டைத் தடுப்பதற்கான மாற்று நடவடிக்கையாக, மூல நீர் உத்தரவாதத் திட்டம் (SJAM) மூலம் சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 616 மில்லியன் லிட்டர் தண்ணீரை அனுப்ப மொத்தம் நான்கு பம்ப் யூனிட்கள் பயன்படுத்தப்படுகின்றன,” என்று லுவாஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுங்கை காபூல் பகுதியில் விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், சுங்கை செமினியின் அசாதாரண வாடை குறைந்து வருவதாகவும் லுவாஸ் தெரிவித்தது.
"காலை 8.30 மணி நிலவரப்படி, வாடை மூன்று டன்களாக பதிவாகியுள்ளன. நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது. லுவாஸ் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிப்பை மேற்கொண்டு வாடை மாசுபாட்டிற்கான உண்மையான காரணத்தை தீவிரமாக அடையாளம் காணும்," என்று தெரிவிக்கப்பட்டது.


