எம். பி. எஸ். ஜே மண்டலம் 22 கவுன்சிலர் டே பூன் டிப் கூறுகையில், இந்த 400 மீட்டர் மேம்படுத்தப்பட்ட திட்டத்தில் வடிகால்களை அகலப்படுத்துதல், பாதுகாப்பு சுவர் நிறுவுதல், வடிகால் திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை அடங்கும்.
இது ஜின்மா அவென்யூ, ஜின்மா சாலை 4 மற்றும் ஜின்மா சாலை 6 போன்ற பல முக்கிய வழித் தடங்களையும் உள்ளடக்கியது, அதே நேரத்தில் பி எஸ் ஸ்ட்ரீட் 3/4 இல் இரும்பால் மூடப்பட்ட கால்வாய் இப்பொழுது நீண்ட கால ஆயுளுக்காக கான்கிரீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீ கெம்பங்கானின் மாநில சட்டமன்ற உறுப்பினர், வோங் சீவ் கி (நடுவில்) எம். பி. எஸ். ஜே மண்டலம் 22 கவுன்சில் உறுப்பினர், டே பூன் கியாட் (வலது) மற்றும் ஸ்ரீ கெம்பாங் கிராமத் தலைவர், எரிக் ஹாங் (இடது) ஆகியோர்
"மேம்படுத்தும் பணிகள் இரண்டு மாதங்களாக நடந்து வருகின்றன, தற்போது நிறைவடைந்துள்ளது". பணிகள் தொடங்கியதிலிருந்து, திடீர் வெள்ள சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், தனது குழு தொடர்ந்து நிலையை கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஸ்ரீ கெம்பங்கன் மாநில சட்டமன்ற உறுப்பினர் வோங் சீவ் கி, வடிகால் அகலப்படுத்துதல் வெறும் இரண்டு அடியிலிருந்து இரண்டு மீட்டராக மேற்கொள்ளப்பட்ட தாகவும், அதே நேரத்தில் சாலை பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டவிரோதமாக குப்பை கொட்டுவதைத் தடுப்பதற்கும் தடுப்பு சுவர் நிறுவப்பட்டதாகவும் விளக்கினார்.

பழைய குறுகிய வடிகால் வடிவமைப்பு, பெரிய நீர் வெளியேற்றத்துக்கு பொருந்தாததால், தண்ணீர் பின் வாங்குவதாகவும் , ஒவ்வொரு முறையும் பலத்த மழை பெய்யும் போதும் திடீர் வெள்ளம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மேம்பாட்டுத் திட்டம் தாமான் ஜின்மாவைச் சுற்றியுள்ள புதிய வீட்டு மேம்பாட்டுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்றும், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் நீரின் ஓட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
"இந்த வடிகால் திறனை மேம்படுத்துவதன் மூலம், இந்த பகுதியில் புதிய குடியிருப்புகள் கட்ட பட்டதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் நீரின் ஓட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.








