SELANGOR

பேரிடர் ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட RM600,000 விநியோகிக்கப்பட்டது 

11 ஜூலை 2025, 4:29 AM
பேரிடர் ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட RM600,000 விநியோகிக்கப்பட்டது 

சபாக் பெர்ணம், ஜூலை 11: இந்த ஆண்டு  ஜூலை தொடக்கம் வரை, பேரிடருக்கான ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட RM600,000 விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில் பாதி புத்ரா ஹைட்ஸ் குழாய் வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

"ஒவ்வொரு ஆண்டும், பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க எம்பிஐ RM1 மில்லியனை ஒதுக்கும்.

இந்த உதவி தொகை புயல்கள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  விநியோகிக்கப் பட்டுள்ளதாக எம்பிஐ தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக, மார்ச் மாதத்தில் ஏற்பட்ட பலத்த புயலால் பாதிக்கப்பட்ட சுங்கை புரோங்கின் பரிட் 4 இல் வசிக்கும் 22 பேர் மற்றும் வர்த்தகர்களுக்கு அவர் நன்கொடைகளை வழங்கினார்.

ஏப்ரல் 1 அன்று புத்ரா ஹைட்ஸில் பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில், தற்காலிக தங்கும் மையத்தின் (PPS) அடிப்படைத் தேவைகளுக்காக RM10,000 மற்றும் 265 பள்ளி மாணவர்களுக்கு தலா RM500 ரொக்கத்தையும் எம்பிஐ வழங்கியது.

கூடுதலாக, பாதிக்கப்பட்ட மொத்தம் 37 மாணவர்கள் RM200 மதிப்புள்ள கித்தா சிலாங்கூர் புத்தக வவுச்சர்களைப் பெற்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.