SELANGOR

மாநில அரசு ஏற்பாட்டில் பிளாஸ்டிக் இல்லாப் பிரச்சாரம்

3 ஜூலை 2025, 4:07 PM
மாநில அரசு ஏற்பாட்டில் பிளாஸ்டிக் இல்லாப் பிரச்சாரம்

ஷா ஆலம், ஜூலை 3: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிளாஸ்டிக் மாசுபாட்டின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள பிளாஸ்டிக் இல்லாப் பிரச்சாரம், கிள்ளானில் உள்ள லாமன் சேனி சஃபாரியில் அதன் இரண்டாவது தொடரை தொடர்கிறது.

கடந்த மே மாதம் சிப்பாங்கில் உள்ள பந்தாய் பாகன் லாலாங்கில் நடைபெற்ற முதல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து இந்தத் தொடர் நடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் நிர்வாக ஆணையர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

இந்தத் தொடருக்கு பொதுமக்கள், அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) மற்றும் தனியார் துறையினரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த இரண்டாவது தொடர் மிகவும் சுவாரஸ்யமானது. ஏனெனில், இது திட்ட தளத்தில் உள்ள வர்த்தகர்கள் உட்பட யாரும் எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தமாட்டார்கள்.

"இந்த முயற்சி சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மேல் அதிக அக்கறை மற்றும் பொறுப்புள்ள ஒரு சமூகத்தை உருவாக்க உதவுகிறது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் ஏரோபிக்ஸ், அரசு நிறுவன கண்காட்சிகள், உணவு,பான விற்பனை மற்றும் அதிர்ஷ்ட குலுக்கு ஆகியவை அடங்கும்.

இந்த பிரச்சாரம் பிபிடிகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் பங்கேற்பை உள்ளடக்கிய நான்கு முக்கிய பிரிவுகளில் செயல்படுத்தப்படும்.

மே 24 அன்று நடைபெற்ற பிரச்சாரத்தின் முதல் தொடர், ஆறு முதல் 70 வயது வரையிலான பல்வேறு வயதுப் பிரிவுகளை உள்ளடக்கிய 1,900க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை வெற்றிகரமாக ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.