ஷா ஆலம், ஜூன் 7- சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், கிள்ளான், கோல லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இன்று நண்பகல் 12.00 மணி வரை கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புத்ராஜெயா, மலாக்கா, பினாங்கு மற்றும் கெடா, பேராக், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபாவில் உள்ள பல பகுதிகளிலும் இதே வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக தீவிரத்தன்மையுடன் கூடிய கனமழைக்கான அறிகுறிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் என எதிர்பார்க்கப்படும் போது இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்படும் என வானிலை ஆய்வுத் துறை குறிப்பிட்டது.
இந்த எச்சரிக்கை ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும். இது வெளியிடப்படும் போது அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை செல்லுபடியாகும்.
பொதுமக்கள் www.met.gov.my என்ற வானிலை ஆய்வுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பெறலாம். ளேலும் வானிலை தொடர்பான சமீபத்திய மற்றும் மிகவும் துல்லியமான தகவல்களைப் பெற myCuaca செயலியைப் பதிவிறக்க பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


