ANTARABANGSA

பாலஸ்தீனத்தில்  பலியானோர் எண்ணிக்கை 54,249 பேராக உயர்வு - 123,000 பேர் காயம்

30 மே 2025, 11:48 AM
பாலஸ்தீனத்தில்  பலியானோர் எண்ணிக்கை 54,249 பேராக உயர்வு - 123,000 பேர் காயம்

காஸா, மே 30 - இஸ்ரேலிய இராணுவம் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி

தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து காஸா பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை  54,249 ஆக உயர்ந்துள்ளது.

பலியானோரில்  பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர் என்று பாலஸ்தீன செய்தி நிறுவனம் (வாஃபா) நேற்று மருத்துவ ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம், இப்போரில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 123,492 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் தொடர்ச்சியான குண்டுவெடிப்பால் மீட்பு முயற்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த தாக்குதல்களில் 67 பேர் கொல்லப்பட்டதாகவும் 184 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில் வடக்கு காஸாவில் பாதிக்கப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை. கடுமையான சண்டை காரணமாக மருத்துவமனைகளை அணுக முடியாததால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.