ANTARABANGSA

மனிதர்களின் வேலை மனித இயந்திரங்களால் பறிபோகாது

21 மே 2025, 7:29 AM
மனிதர்களின் வேலை மனித இயந்திரங்களால் பறிபோகாது

பெய்ஜிங், மே 21 - தற்போது சீனாவில் உருவாக்கப்படும் மனித இயந்திரங்களால், மனிதர்களின் வேலை பறிபோகாது என்று பெய்ஜிங் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான துணை இயக்குநர் லியாங் தெரிவித்தார்.

அதாவது மனித இயந்திர உருவாக்கத்தினால் பெரிய அளவில் வேலையிண்மை சிக்கல் ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டார்.

செயல்திறனை அதிகரிப்பது மூலம் ஆபத்தான சூழல்களில் மனித இயந்திரங்கள் வேலை செய்யும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

அதுமட்டுமில்லாமல், மனிதர்கள் செய்ய விரும்பாத வேலைகளையும் இயந்திரங்கள் செய்யும் என்று லியாங் விள்க்கினார்.

சீனாவில் மனித இயந்திரங்களைத் தயாரிக்கும் துறை வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இதன் மூலம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.