ANTARABANGSA

உக்ரேனில் போரை நிறுத்த ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை - டோனல்ட் டிரம்ப்

19 மே 2025, 8:45 AM
உக்ரேனில் போரை நிறுத்த ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை - டோனல்ட் டிரம்ப்

நியூயோர்க், மே 19 - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் உக்ரேனில் போரை நிறுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான முதல் நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாள்களுக்குப் பிறகு, டோனல்ட் டிரம்ப் புடினுடன் பேசவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இருதரப்பிலும் 1000 போர் கைதிகளை பரிமாற்றம் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், உக்ரேனின் 30 நாள்கள் உடனடி போர் நிறுத்தக் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்தது.

புடினுடனான கலந்துரையாடலை துருக்கியில் மேற்கொள்ள டிரம்ப் திட்டமிட்டிருந்த நிலையில், புடின் அதனை நிராகரித்தார்.

ஆகவே, புதினுடனான தொலைப்பேசி அழைப்பு திங்கட்கிழமை மேற்கொள்ளப்படும் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.