மியாமி, மே 7 - மியாமி கடலில் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள லம்போர்கினி டெக்னோமர் பிராண்ட் சொகுசு கப்பல் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தால் அதில் இருந்த சுமார் 30 பேர் பாதிக்கப்பட்டனர்.
அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, ஐந்து பேர் பயணிக்க வேண்டிய கப்பலில் அதிக சுமை இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் ஏற்பட்டதற்கான சரியான காரணத்தைக் கண்டறிய புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் (FWC) தற்போது விசாரணை நடத்தி வருகிறது.


