ANTARABANGSA

அமெரிக்க துணை அதிபர் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம்

21 ஏப்ரல் 2025, 10:12 AM
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம்

புதுடெல்லி, ஏப்ரல் 21 - இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ், இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்பயணம் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் குறிப்பாகக் கவனம் செலுத்தி, இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும் என்று இந்திய வெளியறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், வெளியுறவுக கொள்கை மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் இச்சந்திப்பின் முக்கிய நிகழ்ச்சி நிரலில் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க வரிகளைத் தவிர்ப்போடு, முன்கூட்டியே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளவும், வாஷிங்டன் நிர்வாகத்துடன் உறவுகளை அதிகரித்துக் கொள்ளவும் ஜேடி வான்சின் இந்த வருகையும் பேச்சுவார்த்தையும் அவசியமாக உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக மோடியின் அமெரிக்க பயணம் மற்றும் அங்கு அவர் அதிபர டோனால்ட் டிரம்பை சந்தித்ததைத் தொடர்ந்து, தற்போது ஜே.டி வான்ஸ் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தையும் 50,000 கோடி அமெரிக்க டாலர் என்ற அளவில் இரட்டிப்பாக்கும் வகையில் நிரணயிக்கப்பட்டிருக்கும் இலக்கிற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.