சிபு, மார்ச் 29- படகிலிருந்து தூக்கியெறியப்பட்ட கேபிள் நிறுவன ஊழியர் நேற்றிரவு நீரில் மூழ்கி இறந்து கிடக்கக் காணப்பட்டார். இங்கிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முக்காவில் உள்ள புங்கான் கெசில் அருகே கடந்த புதன்கிழமை
இச்சம்பவம் நிகழ்ந்தது.
இரவு 7.36 மணியளவில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்ற கிராமவாசிகளால் 30 வயதான சஃபுவான் ஜாபர் என்ற அந்த ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
அவர் ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உடல் கண்டெடுக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அவ்வாடவரின் உடல் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கிய மீட்பு நடவடிக்கை சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஐந்து முதல் 10 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியை உள்ளடக்கியிருந்தது.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர் புங்கான் கெச்சில் பகுதி வழியாகப் பயணம் செய்த படகு ஒரு மரக்கட்டையில் மோதியதில் அவர் தூக்கியெறியப்பட்டதாக நம்பப்படுகிறது.


