கோலாலம்பூர், மார்ச் 18- இந்தோனேசியாவின் வட சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் ரிக்டர் அளவில் 5.1 எனப் பதிவான மிதமான நிலநடுக்கம் இன்று காலை 6.22 மணிக்கு ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் சிபோல்காவிலிருந்து கிழக்கே 41 கிலோ மீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.
இந்த பூகம்பத்தின் எதிரொலியாக பெர்லிஸ், கெடா, பினாங்கு தீவு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை.








