கங்கார், பிப். 11- ஆராவ், ஜெஜாவியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்புறம் உள்ள ஒரு பெஞ்சின் கூரிய முனையில் தனது நான்கு வயது மகளை மோதி காயத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் சிற்றுண்டி நிலையத்தின் பணியாளர் ஒருவர் ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
37 வயதான அந்தப் பெண்ணை இன்று தொடங்கி தொடங்கி விசாரணைக்கு தடுத்து வைப்பதற்கான ரிமாண்ட் உத்தரவை கங்கார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் அனா ரோசானா முகமட் நோர் வழங்கியதாக ஆராவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது மொஹ்சின் முகமது ரோடி தெரிவித்தார்.
நேற்றிரவு 11.30 மணிக்கு ஜெஜாவியில் உள்ள அவரது வாடகை அறையில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக அகமது மொஹ்சின் கூறினார். தனது மகளின் தலையின் பின்புறத்தில் ஒரு தாக்கியதன் விளைவாக அச்சிறுமி பெஞ்சின் மூலையில் மோதி ரத்தம் கசிந்த நிலையில் இருப்பதைச் சித்தரிக்கும் வாட்ஸ்அப் காணொளியை போலீசார் நேற்று இரவு 10 மணிக்கு கண்டதாக அவர் சொன்னார்.
இந்த சம்பவம் பிப்ரவரி 9ஆம் தேதி (கடந்த ஞாயிற்றுக்கிழமை) நடந்துள்ளது. அச்சிறுமியின் வலது புருவத்தில் தையல் போடப்பட்டிருந்தது. இந்த வழக்கு 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(a) பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் கணவரும் ஒரு சிற்றுண்டிச்சாலை தொழிலாளி என்றும் அவர்களுக்கு இரண்டு வயது மகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
நேற்று, ஒரு பெண் தனது மகளின் தலையின் பின்புறத்தில் அடிப்பதைச் சித்தரிக்கும் 47 வினாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.


