MEDIA STATEMENT

தகவல் வழங்குபவரைப் பாதுகாக்கும் சட்டம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்படும்

8 பிப்ரவரி 2025, 12:37 PM
தகவல் வழங்குபவரைப் பாதுகாக்கும் சட்டம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்படும்

புத்ராஜெயா, பிப் 8 - திருத்தம் செய்யப்பட்ட 2010-ஆம் ஆண்டு தகவல் வழங்குபவரைப் பாதுகாக்கும் சட்டம் (சட்டம் 711) எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

எனினும் அது, சம்பந்தப்பட்ட சட்டத் திருத்தம் தொடர்பான அரசாங்க முடிவைப் பொருத்தது.

ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் இச்சட்ட மசோதா இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அசாம் பாக்கி தெரிவித்தார்.

மேலும், அரசியல் பங்களிப்பு சட்டமசோதாவும் அடுத்த ஆண்டில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.