MEDIA STATEMENT

மின்சார கட்டணங்கள் நிர்ணயிப்பதில் மக்களின் நலன் கருத்தில் கொள்ளப்படும்

8 பிப்ரவரி 2025, 11:36 AM
மின்சார கட்டணங்கள் நிர்ணயிப்பதில் மக்களின் நலன் கருத்தில் கொள்ளப்படும்

கோலாலம்பூர், பிப் 7 -- ஊக்கத்தொகை அடிப்படையிலான கண்காணிப்பு வழிமுறையின் கீழ், புதிய கட்டண அட்டவணை உட்பட, தீபகற்ப மலேசியாவில் மின்சார கட்டணங்களை நிர்ணயிப்பதில் மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு கருத்தில் கொள்ளப்படும்.

மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் எந்தவொரு விலை ஏற்றத்திற்கும் அனுமதியளிக்க கூடாது என்ற பிரதமரிஈன் கொள்கைக்கு ஏற்ப எல்லா தரப்புகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்

தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வணிக சமூகத்துடன் இணைந்து, எரிசக்தி ஆணையத்தின் வழி எரிசக்தி மாற்ற மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு, (பெட்ரா) சந்திப்பு நடத்தியுள்ளதாக அவர் கூறினார்.

“அந்த மாற்றத்திற்கு அனைத்து பயனீட்டாளர்களும் குறிப்பாக தொழில்துறை தரப்பு தயார்நிலையில் இருப்பதற்கும், வருங்காலத்தில் மின்சாரத்தை விவேகமாக பயன்படுத்தவும், புதிய கட்டண அட்டவணையை நிர்ணயிப்பதில் வழங்கப்பட்ட கருத்துக்களை அமைச்சு ஆராயும்,“ என்றார் அவர்.

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கான தெனாகா நேஷனல் நிறுவனத்தின் நோக்கம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஃபடில்லா அவ்வாறு பதிலளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.