ஷா ஆலம், பிப். 1- சுபாங் ஜெயா மாநகர் மன்றம் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி தாசேக் ஸ்ரீ செர்டாங்கில் நடைபெறும் 2025ஆம் ஆண்டிற்கான சுபாங் ஜெயா நிலையிலான வாகன பயன்பாடு இல்லா தின நிகழ்வில் கலந்து சிறப்பிக்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் பார்வையாளர்களுக்கு வண்ணம் தீட்டுதல், நாட்டுப்புற விளையாட்டு, ஏரோபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர் மன்ற நிர்வாகம் தெரிவித்தது.
இலவச சுகாதாரப் பரிசோதனைகள், டிங்கி பரவலைக் கண்டறிந்து ஒழிப்பதற்கான திட்டம், மக்கள் நட்பு முகப்பிடத் திறப்பு மற்றும் இராணுவச் சேமப்படையை மேம்படுத்துதல் ஆகியவையும் நடைபெறவுள்ளன.
வெற்றியாளர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன!! எம்.பி.எஸ் ஜே. கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் அல்லது பதிவு மற்றும் கூடுதல் தகவலுக்கு https ://docs.google.com/.../








