சிகிஞ்சான் பிப் 1 ; 2025 பொங்கல் வைபவம் இன்று சிலாங்கூரின் நெற்களஞ்சியமான சிகிஞ்சானில் விவசாய மக்களின் மத்தியில் கொண்டாட மாநில அரசு எடுத்த முடிவுக்கு ஏற்ப வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

தோரணம் பின்னுதல் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவி பிரிதிசா
காலை 8.00 மணிக்கு சுற்று வட்டார மக்கள் ஆலயத்தில் ஒன்று கூட ஆரம்பித்து விட்டனர். அதன்பின் ஏற்பாட்டாளர்கள் ஆரம்பமாக சிறுவர்கள் தோரணம் பின்னும் போட்டியையும் ,
பிறகு கோலம் போடும் போட்டியையும் காலை மணி 9.15க்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்பு பாப்பா ராய்டு துவக்கி வைத்தார் .
பிறகு கோலம் போடும் போட்டியையும் காலை மணி 9.15க்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்பு பாப்பா ராய்டு துவக்கி வைத்தார் .தொடர்ந்து சிறுவர்களுக்கான சக்கர நாற்காலி பரிசு போட்டி அங்கம் சுற்றுவட்டார மக்களின் பெரிய ஆர்ப்பரிப்புடன் நடந்தேரியது.








