MEDIA STATEMENT

423,000க்கும் மேற்பட்ட மக்கள் தென் காஸாவிலிருந்து வட காஸாவுக்கு இடம் பெயர்வு

30 ஜனவரி 2025, 9:33 AM
423,000க்கும் மேற்பட்ட மக்கள் தென் காஸாவிலிருந்து வட காஸாவுக்கு இடம் பெயர்வு

ஹாமில்டன் (கனடா), ஜன. 30 - தெற்கு காஸா பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 430,000 பேர் வடக்கு நோக்கி நகர்வதாக ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை சலா அத்-திடின் மற்றும் அல் ரஷித் சாலைகள் திறக்கப்பட்டதில் இருந்து 423,000 க்கும் அதிகமான மக்கள் தெற்கிலிருந்து வடக்கே சென்றுள்ளனர் என்று எங்கள் மனிதாபிமான பங்கேற்பாளர்கள்  மதிப்பிடுகின்றனர் என்று செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஒரு செய்தியாளர் கூட்டத்தின் போது கூறினார்.

களத்தில் இருக்கும் உதவிப் பணியாளர்கள் பயணத்தில் இருப்பவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சுகாதாரக் கருவிகளை வழங்குகிறார்கள் என்று கூறிய டுஜாரிக், ஐ.நா. குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) குடும்பங்கள் பாதுகாப்பாகவும் வழியில் இணைந்திருக்கவும் உதவும் வகையில் குழந்தைகளுக்கான அடையாள வளையங்களை விநியோகித்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

இப்பயணத்தை  மேற்கொள்வோரில் ஆதவற்ற  குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள்,  நோய்வாய்ப்பட்டவர்கள், உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் தொடர்ச்சியான மருத்துவ பராமரிப்பு தேவைப்படுபவர்களும்  உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதையும்  அவர் சுட்டிக்காட்டினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு, மேற்குக் கரையில் உள்ள ஜெனின் மற்றும் துல்கர்ம் பகுதிகளில்  இஸ்ரேலியப் படைகள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்கின்றன. இந்த நடவடிக்கைகளின் போது ஆபத்தான போர் போன்ற தந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து நாங்கள் பலமுறை கவலை தெரிவித்துள்ளோம் என்று அவர் கூறினார்.

மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகத்தை மேற்கோள் காட்டிய அவர்,  ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பொதுமக்களின் உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டு அத்தியாவசிய சேவைகள் சீர்குலைக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகள் சீர்குலைந்ததால் கிட்டத்தட்ட 1,000 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.