கோலாலம்பூர் டிசம் 28 ;- காட்டாரில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் விருதை மலேசிய சிலம்பம் விளையாட்டு வீரர்கள் கைப்பற்றினர்.
மலேசிய சிலம்பம் விளையாட்டு வீரர்கள் 12 தங்கப் பதக்கங்களை வென்றனர். மலேசிய சிலம்பம் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம். சுரேஷ், காட்டார் தோஹா விளையாட்டு வளாகத்தில் நடந்த தனிப்பட்ட திறன் மற்றும் போர் பிரிவுகளில் தலா இரண்டு தங்கப்பதக்கங்களை ஆறு தேசிய விளையாட்டு வீரர்களும் கைப்பற்றினர் என்றார்.
அவர்கள், 60 கிலோவுக்கு மேல் ஆண்கள் open பொது பிரிவில் பிரகாஷ் , 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாஸ்திவனா (55 கிலோ-65 கிலோ), லீனாஸ்ரீ (30 கிலோ-40 கிலோ), கவிதிரா (45 கிலோ-55 கிலோ), தர்னிஷா (55 கிலோ-65 கிலோ) மற்றும் ராணிஷா (70 கிலோவுக்கு மேல்) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
நமது விளையாட்டு வீரர்கள் அனைவரும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினர் என்று சுரேஷ் கூறினார். இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளோம். கடந்த ஆகஸ்ட் மாதம் சுக்மா சரவாக் போட்டியில் பதக்கங்கள் வென்ற நமது ஆறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்றனர்.
நிறைவு விழாவில் காட்டாருக்கான மலேசிய தூதர் முகமது ஃபைசல் ரஜாலி கலந்து கொண்டார், அவர் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை எடுத்து வழங்கினார் "என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


