கோலாலம்பூர், டிச. 28 - கடந்த புதன்கிழமை கஜகஸ்தானில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு மலேசியா அஜர்பைஜான் நாட்டிற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இங்குள்ள அஜர்பைஜான் தூதரகத்திற்கு வருகை புரிந்த விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு மலேசிய அரசின் சார்பில் இரங்கலைத் தெரிவித்தார்.
அஜர்பைஜான் மக்களுக்கும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் மலேசியாவின் வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்வதறாகான வலிமையும் மன உறுதியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்க மலேசிய அரசாங்கம் பிரார்த்திக்கிறது
அனைத்துலக அளவில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதிலும் அஜர்பைஜானுடன் இராஜதந்திர உறவுகள் மற்றும் நட்பை வலுப்படுத்துவதிலும் தனது கடப்பாட்டை மலேசியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று முகமது சாபு கூறினார்.
67 பயணிகள் பயணம் செய்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவின் செச்சென் குடியரசின் பாக்குவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்த போது காஸ்பியன் கடற்கரையில் அமைந்துள்ள அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்ததாகவும் 29 பேர் உயிர் தப்பியதாகவும் கஜகஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.


