கோலாலம்பூர் டிச 14 ;- ஹாங்காங்கில் நேற்று இரவு நடைபெற்ற 2024 உலக அணி ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் அமெரிக்காவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பின்னர் தேசிய மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு வந்தது.
மலேசியாவுக்காக போட்டியைத் தொடங்கிய உலக நம்பர் 17 ரேச்சல் அர்னால்ட், அமண்டா சோபி கடைசிவரை ஊக்கமுடன் போராடி நல்ல போட்டிமனப்பான்மையைக் காட்டினார்,
ஆனால் ரேச்சல் இறுதியில் 9-11,11-7,9-11,11-5,8-11 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
பின்னர், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக நம்பர் 10 எஸ் சிவசங்கரிக்கு ஸ்கோர் சமன் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டது, ஆனால் அவர் 47 நிமிடங்களில் 11-7,11-9,5-11,2-11,2-11 என்ற கணக்கில் ஒலிவியா ஃபீச்சரிடம் தோல்வியடைந்தார்.
சிவசங்கரியின் தோல்வியால் , மூன்றாவது ஒற்றையர் வீரராக விளையாட திட்டமிடப்பட்டிருந்த ஐரா ஆஸ்மான் அரையிறுதியில் விளையாட்டில் களமிறங்கவில்லை .
தேசிய மகளிர் ஸ்குவாஷ் அணியினர் அவர்களின் சிறந்த அடைவை கனடாவில் 2014 பதிப்பில் காண்பித்தனர், அங்கு இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த பின்னர் மலேசியா இரண்டாம் இடத்தைப் பிடித்தது.


