MEDIA STATEMENT

இன்று பிற்பகல் நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 142,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

30 நவம்பர் 2024, 1:59 PM
இன்று பிற்பகல் நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 142,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

கோலாலம்பூர், நவம்பர் 30 ;- பல மாநிலங்களில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது, தற்காலிக வெளியேற்ற மையங்களுக்கு (பிபிஎஸ்) இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் 142,684 ஆக உயர்ந்துள்ளது, இது இன்று காலை 120,000 க்கும் அதிகமாக இருந்தது,

இதுவரை நான்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது  - நவம்பர் 28 அன்று திரங்கானுவில் உள்ள பெசுட், கம்போங் பினாங்கைச் சேர்ந்த 66 வயதான துவான் ஜுசோ முதல் வெள்ள உயிரிழப்பாகும்.  அடுத்து  புத்ரி சஜித் ஆஸ்மான், 16, மற்றும் அவரது சகோதரி சித்தி பாத்திமா, 13, நேற்று பிற்பகல் உலு திரங்கானுவில் உள்ள அஜில், கம்பொங் புக்கிட் ஆபிடில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.  இதற்கிடையில், வியாழக்கிழமை இறந்த  ஒரு வயது சிறுவன் தும்பாட்,  கம்போங் சேரங் மெலிண்தாங்கில் நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் 3:30 மணி நிலவரப்படி 28,263 குடும்பங்களை உள்ளடக்கிய 91,279 பேராக அதிகரித்துள்ளது, இன்று காலை 80,640  பேருடன் ஒப்பிடும்போது, அவர்கள் அனைவரும் 288  தற்காலிக தங்குமிடங்களில்  தஞ்சம் புகுந்துள்ளனர்.

திரங்கானுவில், திரங்கானு மாநில வெள்ள பேரிடர் மேலாண்மைக் குழுவின் (ஜே. பி. பி. என். டி) செயலகம், இன்று காலை 35,124 பேருடன் ஒப்பிடும்போது, மாலை 4 மணி நிலவரப்படி எட்டு மாவட்டங்களில் 39,954 பேர் பிபிஎஸ்-க்கு வெளியேற்றப்பட்டுள்தாக  அறிவித்துள்ளது.

ஜோகூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று பிற்பகல் 449 ஆக உயர்ந்தது, இன்று காலை 425 பேருடன் ஒப்பிடும்போது, தங்காக் அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களை பதிவு செய்துள்ளது, இது மூன்று பி பி எஸ்-களில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேர், அதாவது தேசிய பள்ளி (எஸ்கே) புக்கிட் ரஹ்மத், நகர் சமய பள்ளி மற்றும் எஸ்கே அப்துல்லா.

கொடாவில் குபாங் பாசு, கோத்தாஸ்டார் , பாடாங் திராப், சிக், போக்கோ சேனா மற்றும் கோலா மூடா ஆகிய ஆறு மாவட்டங்களைத் தவிர, கெடாவில், பேரிடரால் பாதிக்கப்பட்ட சமீபத்திய மாவட்டமாக பாலிங் மாறியுள்ளது. இது இன்று மாலை 4 மணி நிலவரப்படி 52 நிவாரண மையங்களில் வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,514 குடும்பங்களைச் சேர்ந்த 8,252 பேராக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், நேற்று இரவு 10 மணி தொடங்கி வெள்ளம் காரணமாக ஜித்ரா  தொடங்கி கம்போங்  ஊத்தான் வரை வழி தற்காலிகமாக மூடப்பட்ட தாகவும், வடக்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள் அலோர்ஸ்டார் வடக்கு இன்டர்சேஞ்ச் வழியாக நெடுஞ்சாலையில் இருந்து திருப்பி தெற்கு ஜித்ரா இன்டர்சேஞ்ச் வழியாக நெடுஞ்சாலைக்கு மீண்டும் நுழைய பிளஸ் மலேசியா ஒரு அறிக்கையில் ஆலோசனை வழங்கியது.

பெர்லிசில், இரண்டு நிவாரண மையங்கள் ஆராவில் உள்ள குவார் நாங்கா நிவாரண மையம் மற்றும் எஸ்.கே.தித்தி திங்கி நிவாரண மையம்  இன்று பிற்பகல் மூடப்பட்டதால் வெள்ள நிலைமை மேம்பட்டு வருகிறது, இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 குடும்பங்களில் இருந்து 243 ஆகக் குறைந்தது.

நெகிரி செம்பிலானில்   ஜே. கே. எம் பேரிடர் தகவல் வலைத்தளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 573 குடும்பங்களைச் சேர்ந்த 2,007 நபர்களாக குறைந்துள்ளது, அவர்கள் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய 14 நிவாரண மையங்களில் வைக்கப் பட்டுள்ளனர்.

பேராக்கில், கிரியான் மாவட்டத்தில் உள்ள எஸ். கே. பாரிட் ஹாஜி அமானில் உள்ள நிவாரண மையம் பிற்பகல் 3 மணிக்கு முழுமையாக மூடப்பட்டது, பேரழிவு பகுதிகளான பாரிட் அலி கலாங் கிராமம் மற்றும் பாரிட் ஆயர் ஈத்தாம் 2 பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 20 பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.