MEDIA STATEMENT

சிலாங்கூர் அடுத்த ஆண்டு RM 2.35 பில்லியன் வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது 

15 நவம்பர் 2024, 3:41 PM
சிலாங்கூர் அடுத்த ஆண்டு RM 2.35 பில்லியன் வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது 

ஷா ஆலம், நவம்பர் 15 - அடுத்த ஆண்டு RM 2.35 பில்லியன் வருவாய் வசூல் செய்ய மாநில அரசு இலக்கு வைத்துள்ளது என்று மந்திரி புசார்  டத்தோ ஸ்ரீ அமிருடின்  ஷாரி கூறினார்.  இந்த ஆண்டில்  இதுவரை RM 2.4 பில்லியன் வருவாய் வசூலை அடிப்படையாகக் கொண்டது, இது நமது இக்கான RM 2.2 பில்லியனைத் தாண்டியது. 

"இந்த ஆண்டு, எங்கள் பற்றாக்குறை RM 400 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் மதிப்பிட்டோம், RM 2.2 பில்லியன் வருவாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் மாநிலம் RM 2.4 பில்லியனை அடைந்துள்ளது.

"இது உபரி வரவு செலவுத் திட்டமாக மாறக்கூடும். மாநிலம் RM 2.35 பில்லியனை இலக்காக நிர்ணயித்துள்ளது, (நாங்கள்) மிகவும் லட்சியமாக இருக்க விரும்பவில்லை. இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறோம், ஆனால் இது பொருளாதாரத்தை இயக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சியாகும், "என்று அவர் கூறினார்.

2025 சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தை இன்று இங்குள்ள விஸ்மா டிஎன்எஸ் இல் சிலாங்கூர் மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் மந்திரி புசார்  இதனை தெரிவித்தார்.

சிலாங்கூர் RM 4.3 பில்லியன் இருப்புக்களை பதிவு செய்துள்ளது, இது இதுவரை மிக உயர்ந்தது என்றும் அமிருடின் கூறினார். "இது வழக்கமாக இறுதி செய்யப்படவில்லை, ஆண்டு இறுதியில், மாநில அரசுக்குத் தேவையான அல்லது திணிக்கப்பட்ட சில செலவுகளுக்கு இருப்புக்கள் பயன்படுத்தப்படும்.

"(நிர்வாகம்) இந்த ஆண்டு இறுதியில் சிலாங்கூரின் இருப்பு RM4 பில்லியனுக்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது", என்று அவர் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.