27 வயதான ஜோசலின் தேவி தனது தந்தை காலமானதிலிருந்து தனது மூன்று உடன்பிறப்புகளுக்கு ஒரே வருவாய் ஈட்டுபவராக இருந்து வருகிறார், மேலும் அவரது தாயார் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை விட்டு வெளியேறினார்.
ஒரு முகநூல் பதிவில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தனது அரசியல் செயலாளர் அஹ்மத் ஃபர்ஹான் ஃபவுஸி வழி நேற்று ஜோசலினிடம் தனது பங்களிப்பை ஒப்படைத்ததாக கூறினார்.
ஒரு பிலிப்பினோ வாசியான அவரது தாயார் பிலிப்பைன் சுக்குத் திரும்பிவிட்டார்" தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து குடும்பத்தை காப்பாற்றும் சுமையை ஏற்க வேண்டும் என்று தனக்கு பணிக்கப்பட்டதாக, கூறினார்.
"இன்னும் பள்ளியில் இருக்கும் இரண்டு இளைய உடன்பிறப்புகளும், மன வளமிக்க இளைய சகோதரரையும் அவர் கவனித்துக் கொள்ள வேண்டும்".
மேலும் ஜோசலினுக்கு அடையாள அட்டை இல்லாதது. அவர் நிலையை மேலும் கடுமையாக்கியது. அடையாள கார்டு இல்லாததால் நிலையான வேலையில் அமர இடையூறாக உள்ளதையும் தெரிவித்தார்.
இப்படிப்பட்ட பல்வேறு நெருக்குதலுக்கு ஆளான ஜோசபின் அடையாள ஆவணத்திற்கான தனது விண்ணப்பத்திற்கு உதவுமாறு ஃபர்ஹானிடம் கேட்டதாக அவர் கூறினார்.
ஒரு மலேசிய இந்தியரான மறைந்த அவரது தந்தையும், பிலிப்பைன்ஸை சேர்ந்த அவரது தாயும் ஜோசபின் பிறந்த பின்னரே தங்கள் திருமணத்தை பதிவு செய்தது, அவருக்கு ஏற்பட்ட அடையாள அட்டை பிரச்சனைக்கான முக்கிய முட்டுக்கட்டை. என அறியப்படுகிறது.








