கோலாலம்பூர், அக் 21 - எழுத்து மற்றும் தேசிய இலக்கியத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவின் அடையாளமாக, தேசிய எழுத்தாளர் சங்கத்தின் (பேனா) வசதிகளை புதுப்பிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் RM 50,000 நன்கொடை அளித்துள்ளார்.
தேசத்தின் எழுத்து மற்றும் இலக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க, சமீபத்தில் தனது சார்பாக பேனா பிரதிநிதிகளை சந்தித்த அவரது அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் ஃபௌசி இந்த நன்கொடையை வழங்கினார்.
ஜூன் மாதம் ஏழு தேசிய விருது பெற்றவர்களுடன் அன்வார் நடத்திய உரையாடல் அமர்வின் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு இருந்தது இது மலேசியாவில் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தின் அதிகாரம் தொடர்பான பல நுண்ணறிவு கருத்துக்களைத் தூண்டியது.
"திறமையை வளர்ப்பதிலும், அறிவுத் திறனைப் பாதுகாத்து, உள்ளூர் எழுத்தாளர்களின் குரல்களுக்கு வலுவூட்டுவதிலும் பேனா தொடர்ந்து முக்கியப் பங்காற்ற இந்த விவாதம் மற்றும் நன்கொடை உதவும்.
"இலக்கிய, மொழி மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கான மையமாக பேனா மாறுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது," என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.
- பெர்னாமா








