ஈப்போ, அக் 21: இன்று காலை 11.06 மணியளவில் ஈப்போவில் ஏற்பட்ட வெடிப்பு சத்தம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலு கிந்தா பொது நடவடிக்கை படையின் வடக்குப் பிரிவு குண்டுவெடிப்பு தொடர்பான
பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. அதே நேரத்தில் நிலம் மற்றும் சுரங்க அலுவலகத்தில் (PTG) மதியம் 12 மணிக்கு முன் குவாரியில் குண்டுவெடிப்பு எதுவும் நடத்தப்படவில்லை என பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் கூறினார்.
இன்று காலை 11.24 மணியளவில் இந்தோனேசியாவின் ஹல்மஹேராவில் நிலநடுக்கம்
ஏற்பட்ட போதிலும், மலேசியாவில் குறிப்பாக ஈப்போவில், நில அதிர்வால் எந்த பாதிப்பும்
ஏற்படவில்லை என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட் மலேசியா) மதிப்பாய்வின் முடிவுகள் கண்டறியப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர், தகவல் தெரிந்தவர்கள் பேராக் கன்டிங்ஜென்ட் கட்டுப்பாட்டு மையத்தை 05-2451119 அல்லது 05-2451073 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் அமைதி காக்குமாறும், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் தொடர்பான ஊகங்களை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- பெர்னாமா








